ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை கைதுசெய்த இலங்கை கடற்படையினர்.

by Editor / 24-12-2024 09:53:01am
 ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை கைதுசெய்த இலங்கை கடற்படையினர்.

 தமிழ்நாட்டு மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. மீனவர்களை கைது செய்வதுடன் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்வைத்து தொடர்ந்து  நடைபெற்றுவருகிறது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 17 மீனவர்கள் 2 விசைப்படகுகள் மூலம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி  17 மீனவர்களை கைது செய்தனர்.

அதனுடன் அவர்களின் 2 விசைப்படகுகளையும் சிறைபிடித்துச் சென்றனர். இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கைகள் மீனவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வர மீனவர்களை உடனடியாக விடுவிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர் சங்கங்கள் மற்றும் மீனவர்களின்  உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :  ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை கைதுசெய்த இலங்கை கடற்படையினர்.

Share via