மாணவி கொலை: 2 முறை தூக்கிலிட அல்லிகுளம் மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு.

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஒரு தலைக்காதலுக்காக சத்யபிரியா என்ற பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் இன்று மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற இந்த கொடூர கொலை வழக்கில்,குற்றவாளி சதீஷ்க்கு தூக்கு தண்டனை.3 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்தபிறகு 2 முறை தூக்கிலிட அல்லிகுளம் மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு.
சிபிசிஐடி மிகச்சிறப்பாக விசாரித்தால்தான் மாணவி கொலை வழக்கில் குற்றத்திற்கான தூண்டுதலைக் கண்டறிந்து, குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என அரசுத் தரப்பு வழக்கறிஞர் ரவீந்திரநாத் ஜெயபால் கூறியுள்ளார். மேலும், குற்றவாளிக்கு மரண தண்டனை, 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையுடன் ரூ.35,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags : மாணவி கொலை: 2 முறை தூக்கிலிட அல்லிகுளம் மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு.