தமிழக ஆளுநருடன் சபாநாயகர் அப்பாவு சந்திப்பு

by Staff / 03-01-2025 02:47:50pm
தமிழக ஆளுநருடன் சபாநாயகர் அப்பாவு சந்திப்பு

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜன. 6 ஆம் தேதி தொடங்கவுள்ளதையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். இந்தாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வருகிற ஜன.6 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ளது. இதையடுத்து, சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரை நிகழ்த்த ஆர்.என்.ரவிக்கு அப்பாவு அழைப்பு விடுத்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo