யூடியூபர் சித்ரா மீது  யூடியூபர் உதயா சுமதி மதுரை சைபர் கிரைம் போலீசில் புகார்.

by Editor / 28-01-2025 05:43:17pm
யூடியூபர் சித்ரா மீது  யூடியூபர் உதயா சுமதி மதுரை சைபர் கிரைம் போலீசில் புகார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, பிரபல யூடியூபர் சித்ரா சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பல யூடியூபர்களின் சம்பளத்தை சில யூடியூபர்கள் ஹேக் செய்து, தங்களுடைய அக்கவுண்ட்டுக்கு வருவது போலச் செய்து விடுகிறார்கள். என்னுடைய சம்பளம் யூடியூபர் திவ்யா கள்ளச்சி அக்கவுண்ட்டுக்கு மாறி இருந்தது. அது குறித்து நான் அவரிடம் கேட்டேன். ஆனால் அவர் எனக்கு சரியாக பதில் அளிக்கவில்லை. எனவே, அவரைச் சந்தித்து என்னுடைய பணத்தை வாங்குவதற்காக போயிருந்தேன். அங்கு, சில குழந்தைகளை திவ்யா கள்ளச்சி அடைத்து வைத்திருந்தார். அந்தக் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாவதாக என்னிடம் கூறினர் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். மேலும், வேறு சில யூடியூபர்கள் பற்றி பல்வேறு பாலியல் சர்ச்சையான விஷயங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர் பேசினார். இந்த நிலையில் தான், ஆதாரமின்றி சித்ரா தன்னைப் பற்றி அவதூறாகப் பேசியதாக யூடியூபர் உதயா சுமதி என்பவர் இன்று மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உதயா சுமதி கூறுகையில்:-

என்னுடைய யூடியூப் சேனலில் நான் எந்த ஆபாசமான வீடியோக்களும் போட்டது கிடையாது. யாரைப் பற்றியும் தரக்குறைவாகவும் பேசியதும் கிடையாது. ஆனால் யூடியூபர் சித்ரா என்பவர், என்னைப் பற்றியான பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருக்கிறார்.

நான் பணத்திற்காகப் போகிறேன் என்று அவர் சொல்லியுள்ளார். அது உண்மை என்றால், ஆதாரத்தை என்னிடம் காட்டச் சொல்லுங்கள். எனக்கு என்னுடைய மகனை வளர்ப்பதற்கும், குடும்பத்தைக் கவனிப்பதற்குமே நேரம் சரியாக உள்ளது. 

நான் என்னுடைய வேலையைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேனே தவிர அந்த சித்ரா யார் என்று கூட எனக்குத் தெரியாது. அவருடைய வீடியோக்களையும் நான் பார்த்தது கிடையாது.

என்னுடைய கணவர் இறந்ததால் நான் தனியாக இருக்கிறேன் என்று தான் அந்தப் பெண் என் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார் எனக் கூறியுள்ளார். 

 

Tags : யூடியூபர் சித்ரா மீது  யூடியூபர் உதயா சுமதி மதுரை சைபர் கிரைம் போலீசில் புகார் 

Share via