கும்பமேளாவில் புகைப்படங்களை நீரில் நனைக்க ரூ.1100 வசூல்
உத்தரப் பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இந்நிலையில், கும்பமேளாவில் நீராட நேரில் வரமுடியாதவர்கள் தங்களது புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பினால், அப்புகைப்படங்களை நீரில் மூழ்கி எடுப்போம் என ஒருவர் பேசும் வீடியோ வைரலாகியுள்ளது. அதற்கு, ரூ.1100 கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :



















