குமரி அரசு பழத்தோட்டத்தில் தீ விபத்து; ரூ. 1. 5 கோடி நஷ்டம்

கன்னியாகுமரியில் அரசு தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பழத்தோட்டம் உள்ளது. இந்த பழத்தோட்டத்தில் ஏராளமான மா, சப்போட்டா வாழை, கொய்யா உட்பட பல வகை மரங்கள் உள்ளது. இந்த பழத்தோட்டத்தில் நேற்று மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல மரங்கள் எரிந்து நாசமாயின. இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைக்கும் படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அனைத்தனர். இதில் ரூ. 1. 5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Tags :