சுற்றுலாப்பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி. தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அறிக்கை.

by Editor / 30-09-2023 11:54:44pm
சுற்றுலாப்பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி. தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அறிக்கை.

தென்காசி மாவட்டம் கடையத்தைச் சார்ந்தவர்கள் உதக மண்டலத்திற்கு சுற்றுப்பயணம் சென்ற பொழுது பேருந்து கவிழ்ந்து விபத்தில் எட்டு பேர் பலியாகி உள்ளனர் ஏராளமான ஒரு காயம் அடைந்துள்ளனர்.  விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் வருமாறு: பத்து நபர்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் 8 நபர்களுடைய உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 
தேவி கலா,முப்புடாதி,முருகேசன்,கவுசல்யா,தங்கம்,இளங்கோ,ஜெயா,சிறுவன்நிதின்கண்ணா,  5 பெண்கள்,2 ஆண்கள்,1 சிறுவன் என 8 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து உடலை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றனஇது குறித்து கூடுதல் விபரங்கள் பெறுவதற்கு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள அவசர கால எண் 04633 290548 மற்றும்1077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை ரவிச்சந்திரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

Tags : தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அறிக்கை.

Share via