அரசு பள்ளிக்கு ரூபாய் 2.கோடி மதிப்பிலான இரண்டு ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தம்பதியர்..கிராம மக்கள் மற்றும் தலைமை ஆசிரியை தம்பதியருக்கு பூங்கொத்து கொடுத்து பாராட்டு..

by Staff / 27-02-2025 05:21:12pm
அரசு பள்ளிக்கு ரூபாய் 2.கோடி மதிப்பிலான இரண்டு ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தம்பதியர்..கிராம மக்கள் மற்றும் தலைமை ஆசிரியை தம்பதியருக்கு பூங்கொத்து கொடுத்து பாராட்டு..

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழையூர் கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் தமிழ்ச்செல்வி தம்பதியினர்,தங்கள் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ரூபாய் 2.கோடி மதிப்பில் ஆன இரண்டு ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கி உள்ளனர். தானமாக நிலம் வழங்கிய தம்பதியருக்கு கிராம பொதுமக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டதுடன் பாராட்டுகளையும் தெரிவித்தனர். 

மேலூர் அருகே கீழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோபாலகிருஷ்ணன்- தமிழ் செல்வி தம்பதியினர். மதுரையில் கிரானைட் மற்றும் உணவகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

தங்களது கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு ஏக்கர் நிலத்தை இன்று தானமாக வழங்கினர்.அரசு நடுநிலைப் பள்ளியாக இருந்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு கீழையூர் கிராமத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் கட்டடம் கட்டுவதற்காக அரசு சார்பில் நிலம் வழங்கப்பட்டு உள்ளது.

வெகுதூரம் சென்று பள்ளி மாணவர்கள் குறிப்பாக பெண் குழந்தைகள் படிப்பது என்பது சாத்தியம் இல்லை என்பதை கருத்தில் கொண்டு பள்ளி தலைமை ஆசிரியை செல்வி, அதே கிராமத்தைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் தமிழ்ச்செல்வி தம்பதியரிடம் அணுகி தங்களுக்கு நிலம் வழங்க உதவி செய்ய வேண்டும் என கூறியதை அடுத்து மேலூர் திருப்பத்தூர் சாலையில் உள்ள ரூபாய்  2.கோடி மதிப்பிலான 2.15 ஏக்கர் நிலத்தை இன்று தம்பதியர் அரசு பள்ளிக்கு தானமாக மேலூர் கிழக்கு சார்பதிவாளர் முன்னிலையில் நிலத்தை பதிவு செய்து கொடுத்தனர். 

அரசு பள்ளிக்கு நிலத்தை தானமாக வழங்கிய தம்பதியருக்கு கிராம பொதுமக்கள் மற்றும் தலைமை ஆசிரியை செல்வி உள்ளிட்ட ஆசிரியர்கள் பூக்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்ததுடன் நன்றி தெரிவித்து கொண்டனர்.

இதுகுறித்து தம்பதியர் கூறும் போது தாங்கள் பிறந்த கிராமத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிய போது அதுவும் குறிப்பாக இளம் சிறார்களின் கல்விக்காக உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு பள்ளிக்கு இந்த நிலத்தை தானமாக வழங்கி உள்ளதாகவும் தொடர்ந்து மருத்துவமனை கட்டடம் உள்ளிட்ட பல்வேறு சமூக நல சேவைகளில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
 

 

Tags :

Share via