ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.9 ஆக பதிவு.

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 4.43 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மாகாணம் பஹ்லன் நகரில் இருந்து 164 கிலோமீட்டர் தொலைவில் 75 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.9 ஆக பதிவாகியுள்ளன.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது.தலைநகரமான டெல்லி உள்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.9 ஆக பதிவு.