வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10,000 நிவாரணம்

by Staff / 17-07-2023 03:59:41pm
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10,000 நிவாரணம்

டெல்லியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், நதிக்கரையில் வசிக்கும் பல ஏழைக் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சில குடும்பங்களில் வீட்டு உபயோகப் பொருள்கள் முழுவதும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த சூழலில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவியாக வழங்கப்படும் என ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது. மழை வெள்ள பாதிப்பில் இருந்து டெல்லி மக்கள் படிப்படியாக மீண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via