உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் அறிவிப்பு

by Editor / 23-04-2025 01:20:07pm
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் அறிவிப்பு

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார். மேலும், படுகாயமடைந்தோருக்கு தலா ரூ.2 லட்சம், லேசான காயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via