ரேஷன் கடை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் செந்தில் சுதர்சன் (47). இவருக்கு கவிதா என்ற மனைவியும் 15 மற்றும் 11 வயதில் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். செந்தில் சுதர்சன் அந்த பகுதியில் உள்ள நியாய விலை கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவியிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் மன வருத்தத்தில் இருந்த செந்தில் சுதர்சன் நேற்று வீட்டின் மின்விசிறியில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது சகோதரர் கிரி பிரசாத் என்பவர் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags :