8 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்

by Editor / 24-05-2025 02:03:26pm
8 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று (மே 24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே இன்று தொடங்கியுள்ளது. நாளை (மே 25) நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.

 

Tags :

Share via