பாகிஸ்தான் உளவாளியை சுட்டுக் கொன்ற பிஎஸ்எஃப்

குஜராத் எல்லை வழியாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் உளவாளியை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். நேற்று இரவு பனஸ்கந்தா சர்வதேச எல்லை வழியாக ஊடுருவல் முயற்சி நடந்தது. இதற்கிடையில், குஜராத்தின் ஏடிஎஸ்-ஆல் கட்ச் பகுதியில் மற்றொரு பாகிஸ்தான் உளவாளி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பாகிஸ்தானுக்கு உளவாளியாக இருந்து இந்தியா தொடர்புடைய தகவல்களை வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு தழுவிய அளவில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டள்ளது.
Tags :