வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி - திருச்செந்தூர் பகுதிகளில் ரயில்வே அதிகாரிகள் குழு ஆய்வு. 

by Editor / 23-12-2023 10:01:34pm
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி - திருச்செந்தூர் பகுதிகளில் ரயில்வே அதிகாரிகள் குழு ஆய்வு. 

மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஸ்ரீ ஷரத் ஸ்ரீவஸ்தவா இன்று  திருநெல்வேலி - திருச்செந்தூர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்து, கிளை அதிகாரிகளுடன் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தை பார்வையிட்டார்.

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஊழியர்களுடன் டிஆர்எம் கலந்துரையாடினார்.

திருச்செந்தூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகளுக்கு உரிய நேரத்தில் உதவி செய்த கிராம மக்களையும் டிஆர்எம் சந்தித்தார்.மேலும் கோட்ட ரயில்வே மேலாளர் மற்றும் கிளை அதிகாரிகள் தூத்துக்குடிக்கு சென்றனர்.

சீனியர் கோட்ட பொறியாளர் தெற்கு ரயில்வே ஸ்ரீமதி. எம். பிரவீணா,சீனியர் கோட்டப் பொறியாளர், மத்தியபகுதி  ஸ்ரீ வி. சூர்யமூர்த்தி,கோட்டப் பொறியாளர், வடக்கு ஸ்ரீ சந்தீப் பாஸ்கர், கோட்ட மின் பொறியாளர், இழுவை விநியோகம் எஸ். முத்துக்குமார்,கோட்டப் பணியாளர் அலுவலர்,மற்றும் ஸ்ரீடி.சங்கரன், ஆய்வின் போது கோட்ட ரயில்வே மேலாளர் உடன் சென்றார்.

 

Tags : திருநெல்வேலி - திருச்செந்தூர் பகுதிகளில் ரயில்வே அதிகாரிகள் குழு ஆய்வு. 

Share via