தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தீர்மானங்கள்

by Admin / 01-06-2025 09:50:54pm
தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தீர்மானங்கள்

மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில்தி.மு.க. கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம்01-06-2025

 

தீர்மானங்கள்

 

1.         முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் நாளை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம்!        

 

2.         மக்களின் பேராதரவுடன் தொடர் வெற்றி நாயகராகத் திகழும் கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டுகள்!     

 

3.         இந்தியாவுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வை மேம்படுத்தும் திராவிட மாடல் அரசு!   

 

4.         உழவர்கள் - நெசவாளர்கள் - மீனவர்கள் என அனைத்துத் தரப்பினரின் வாழ்விலும் புதிய விடியல் தந்த திராவிட மாடல் அரசின் சாதனைகளைப் பரப்புவோம்!               

 

5.         தமிழினத்திற்குப் பெருமை சேர்த்த தலைவர்களைப் போற்றும் கழக அரசுக்குப் பாராட்டு!       

 

6.         ஒவ்வொரு குடும்பமும் பயன் பெற்றுள்ள திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களைத் தொடர்ந்து மக்களிடம் எடுத்துரைப்போம்!          

 

7.         தமிழ்நாட்டின் எதிர்கால நம்பிக்கையாக மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள துணை முதலமைச்சர் - இளம் தலைவர் அவர்களின் பணி தொடரத் துணை நிற்போம்!      

 

8.         ஏழை-எளிய மக்களை வதைக்கும் நகைக்கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும்!   

 

9.         தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம்!     

 

10.       தமிழர்களின் மொழி உணர்வுடன் விளையாடாமல் இந்தித் திணிப்பைக் கைவிடுக!  

 

11.       கீழடி ஆய்வை மறுக்கும் தமிழ் விரோத பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்!             

 

12.       இரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் பா.ஜ.க அரசுக்கு கண்டனம்!     

 

13.       சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் இசுலாமியர் சொத்துக்களைச் சூறையாடும் வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுக!           

 

14.       ஒன்றிய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்!     

 

15.       மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் தொடரும் அநீதிகள்!        

 

16.       மீனவர்கள் நலன் காக்க கச்சத்தீவை மீட்டிடுக!        

 

17.       சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாகவும் முறையாகவும் நடத்திடுக!       

 

18.       தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை கூடாது!         

 

19.       ஆளுநரின் அதிகார வரம்பை வரையறுத்து மாநில உரிமையை நிலைநாட்டிய உச்சநீதிமன்ற தீர்ப்புக்குக் காரணமான கழகத் தலைவருக்குப் பாராட்டு!  

 

20.       குடியரசுத் துணைத் தலைவரின் விமர்சனத்திற்குக் கண்டனம்!              

 

21.       அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் உச்சநீதிமன்றத்தோடு மோதும் பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்!        

 

22.       உச்சநீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்துக் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் இணைத்திடுக!          

 

23.       மலரட்டும் மாநில சுயாட்சி!         

 

24.       பேரிடர் மீட்புப் பணியில் கழக அரசுடன் கழகத்தினரும் துணை நிற்போம்!

 

25.       எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என அழகிய தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம்!         

 

26.       அ.தி.மு.க. ஆட்சியின் அவலமான பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைத் தீர்ப்புக்கு வரவேற்பு!   

 

27.       வஞ்சக பா.ஜ.க.வையும் துரோக அ.தி.மு.க.வையும் விரட்டியடித்து 2026-இல் கழக ஆட்சி தொடர களப்பணியைத் தொடங்குவோம்! 

 

 

தீர்மானம் : 1

 

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பிறந்தநாளான

 

ஜூன் 3-ஆம் நாளை செம்மொழி நாளாக

 

நாடெங்கும் கொண்டாடுவோம்!

 

 

 

‘உடன்பிறப்பே’ எனும் ஒற்றைச் சொல்லால் நம்மையெல்லாம் ஒருங்கிணைத்து அரவணைத்து அரை நூற்றாண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தலைமை தாங்கி, சோதனைகளிலும் நெருக்கடிகளிலும் தொடர்ந்து வழிநடத்தி, இந்திய அரசியலைத் தீர்மானிக்கும் மாநிலக் கட்சியாக தி.மு.க.வை வலிமைமிக்க இயக்கமாக உயர்த்தியவரும், 5 முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்று நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்தவரும், பன்முக ஆற்றல் கொண்ட படைப்பாளியாக - நிர்வாகத் திறன்மிக்கவராக விளங்கியவருமான முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் வழியில் நடைபெறும் திராவிட மாடல் அரசு கலைஞரின் நூற்றாண்டையொட்டி -

 

v  சென்னை கிண்டியில் “கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை”,

 

 

 

v  மதுரையில் உலகத் தரத்திலான “கலைஞர் நூற்றாண்டு நூலகம்”,

 

 

 

v  சென்னை கிளாம்பாக்கத்தில் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்”,

 

 

 

v  மதுரையில் “முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் உலகத் தரத்திலான ஏறுதழுவுதல் அரங்கம்”,

 

 

 

v  திருச்சியில் “முத்தமிழறிஞர் கலைஞர் புதிய பேருந்து முனையம்”

 

- உள்ளிட்ட பல மக்களுக்குப் பயன்தரும் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதுடன், தம் அண்ணனாம் பேரறிஞர் அண்ணாவிடம் இரவலாக வாங்கிய இதயத்தைத் திரும்ப ஒப்படைத்து, அவர் அருகிலேயே கடற்கரையில் ஓய்வு கொள்ளும் முத்தமிழறிஞர் கலைஞருக்கு, உலகம் திரும்பிப் பார்க்கும் வகையிலான நினைவிடமும், நவீனத் தொழில்நுட்பத்திலான கலைஞர் உலகமும் அமைத்து, சிறப்பு சேர்த்திருப்பதுடன் -

 

·                 இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்’,

 

·                  

 

·                 ஏழைகள் ஏற்றம் பெற ‘கலைஞர் கனவு இல்லம் திட்டம்’,

 

·                  

 

·                 சாதி பேதமற்ற வகையில், கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்க, ‘கலைஞர் கைவினைத் திட்டம்’,

 

               

 

·                 கும்பகோணத்தில் அமையவுள்ள ‘கலைஞர் பல்கலைக்கழகம்’

 

- என முத்தமிழறிஞர் கலைஞரின் புகழ் போற்றும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைத்திடக் காரணமான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் நாளை செம்மொழி நாளாகக் கொண்டாடவும் - தமிழ்நாடு முழுவதும் 102 இடங்களில் முத்தமிழறிஞர் கலைஞரின் சாதனைகளைப் போற்றும் நிகழ்ச்சிகளை நடத்திடவும் ஆவன செய்திருப்பதற்கு இப்பொதுக்குழு தனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், தமிழ்நாடு முழுவதும் மாவட்டக் கழகங்கள் தொடங்கி ஒன்றிய - நகர - பேரூர் - பகுதி - வட்ட - கிளைக் கழகங்கள் வரை, “முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளில்” அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தி, கழகக் கொடியேற்றி எழுச்சியுடன் கொண்டாடி, மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிட இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

 

தீர்மானம் : 2

 

மக்களின் பேராதரவுடன்

 

தொடர் வெற்றி நாயகராகத் திகழும்

 

கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்

 

திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டுகள்!

 

 

 

இன்றைய இந்திய அரசியல் களத்தில் ஏறத்தாழ 60 ஆண்டுகால பொதுவாழ்வுக்குரிய கட்சித் தலைவராகவும், திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்தில் கழகத் தொண்டர், வட்டப் பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர், மிசா சட்டத்தின்கீழ் அரசியல் கைதி, இளைஞரணி மாநில அமைப்பாளர் - செயலாளர், கழகத் துணைப் பொதுச் செயலாளர், கழகப் பொருளாளர், கழகச் செயல் தலைவர், கழகத் தலைவர் எனக் கழகத்தில் படிபடியாக வளர்ச்சி பெற்றவரும், மக்கள் பணியில் - சட்டமன்ற உறுப்பினர், சென்னை மாநகர மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், இன்று தமிழ்நாடு முதலமைச்சர் என மக்களின் ஆதரவுடன் பல்வேறு அரசியல் வளர்ச்சிப் படிக்கட்டுகளைத் தொட்டவரும் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றது முதல் எதிர்கொண்ட 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல் களங்கள் என அனைத்திலும் மகத்தான வெற்றியைக் கழகம் பெற்றிடும் வகையில் வியூகத்தை வழங்கி, அந்த வெற்றிக்கு ஓயாது உழைத்திட்டவரும், தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் முதலமைச்சர் பொறுப்பை ஏற்று, இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்களைத் தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருபவருமான கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, இந்தப் பொதுக்குழு தனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகக் கூட்டணி முழுமையான வெற்றிபெற்று, கழகத் தலைவர் அவர்கள் தொடர்ந்து முதலமைச்சர் பொறுப்பேற்க நாம் அனைவரும் அயராது உழைப்போம் என இப்பொதுக்குழு உறுதியேற்கிறது.

 

தீர்மானம் : 3

 

இந்தியாவுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வை மேம்படுத்தும் திராவிட மாடல் அரசு!

 

 

 

திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் அமைப்பான நீதிக்கட்சியின் ஆட்சியில் பெண்களுக்கு வாக்குரிமை, சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டதில் தொடங்கி முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தில், பெண்களுக்குக் காவல்துறையில் பணிகள், குடும்பச் சொத்தில் சம உரிமை, அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு, மகளிர் சுயஉதவிக் குழுக்கள், உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு என்று பெண்கள் சமூகத்திலும் பொருளாதாரத்திலும் விடுதலையுடன் வளம் பெறுவதற்கான திட்டங்கள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றது முதல்  பேருந்துகளில் மகளிர், மாணவிகள், மாற்றுத் திறனாளிகள், திருநர்கள் ஆகியோருக்கு கட்டணமில்லா விடியல் பயணம், 1.14 கோடி இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், பெண்களுக்கு மானியத்துடன் இளஞ்சிவப்பு (பிங்க்) ஆட்டோ, புதுமைப் பெண் திட்டம், அரசுப் பணிகளில் பணியாற்றும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு ஓராண்டு, பணியாற்றும் பெண்களுக்குத் தோழி விடுதி, வேலைக்குச் செல்லும் பெண்களின் குழந்தைகள் தங்கிட 17 சிப்காட் தொழிற்சாலைப் பூங்காக்களில் குழந்தைகள் காப்பகம், சுயஉதவிக்குழு சகோதரிகள் தயாரிக்கும் பொருட்களை எடுத்துச் செல்ல இலவசப் பயணத் திட்டம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்தவர்களுக்குக் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற முன்னுரிமை, கோ-ஆப்டெக்ஸ் பொருட்களுக்கு 5 விழுக்காடு தள்ளுபடி, மகளிருக்கு ஆவின் தயாரிப்புப் பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை, இ-சேவை மையங்களில் 10 விழுக்காடு சேவைக் கட்டணம், மற்றும் சமூகநீதித் திட்டங்கள் போன்ற எண்ணற்ற சமூக நலத்திட்டங்களைக் கொண்டு வந்து மகளிரின் வாழ்வை மேம்படுத்தி, இந்திய அளவிலான பெண் பணியாளர்களில் தமிழ்நாட்டுப் பெண்கள் 42% என்கிற சாதனையையும் படைத்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இப்பொதுக்குழு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது.

 

தீர்மானம் : 4

 

உழவர்கள் - நெசவாளர்கள் - மீனவர்கள் என

 

அனைத்துத் தரப்பினரின் வாழ்விலும்

 

புதிய விடியல் தந்த திராவிட மாடல் அரசின்

 

சாதனைகளைப் பரப்புவோம்!

 

 

 

உழவர்கள் மீதான உண்மையான அக்கறையோடு திராவிட மாடல் அரசு செயல்படுவதால்தான், ஆட்சிப் பொறுப்பேற்றதுமே வேண்மைக்கெனத் தனி நிதிநிலை அறிக்கையை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பாசனப் பரப்பு அதிகரித்தும், விளைச்சல் மற்றும் கொள்முதல் ஆகியவை அதிகரித்தும் ஓராண்டை மற்றொரு ஆண்டு மிஞ்சும் வகையிலான சாதனைகளைப் படைத்தும் வருகிறது.

 

கடந்த ஆட்சிக்காலத்தில் உழவர்கள் எத்தகைய துயர்களையெல்லாம் எதிர்கொண்டார்கள் - எத்தனை எத்தனை உழவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்கள் என்பதை நாடறியும். ஆனால், திராவிட மாடல் ஆட்சியில், இயற்கை பொய்க்காத மழை பொழிவு மற்றும் திட்டங்களாலும் - முன்னெடுப்புகளாலும் - சிறந்த திட்டமிடல்களாலும் கடந்த நான்காண்டுகளில் குறிப்பிட்ட நேரத்தில் மேட்டூர் அணையைத் திறந்து, உழவர்களின் நலனைப் பாதுகாத்திருக்கிறது. இந்த ஆண்டும், வருகின்ற ஜூன் 12-ஆம் நாள் மேட்டூர் அணையைத் திறந்து வைக்கவுள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

 

இதுவரையில் வேளாண்மைக்கெனத் தனியாக 5 நிதிநிலை அறிக்கைகள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, நெல் - கரும்பு - பருத்தி - எண்ணெய் வித்துகள் - பயறு வகைகள் உள்ளிட்ட அனைத்து வகை தானியங்களின் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதுடன் வேளாண்மைக்கு ஆதாரமான நீர் மேலாண்மையில் கவனம் செலுத்தி, நவீன கருவிகள் வழங்கப்பட்டு, பணப் பயிர் வேளாண்மை, இயற்கை வேளாண்மை, கால்நடைகள் வளர்ப்பு என அனைத்தையும் மேம்படுத்தி சிறந்த உழவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

 

உழவர்களின் கோரிக்கைகளுக்குச் செவிமடுத்து நலன் காக்கும் திராவிட மாடல் அரசு நெசவாளர்களின் வாழ்விலும் வெளிச்சம் பரவும் வகையில், கடந்த 4 ஆண்டுகளில் ஈரோடு, கரூர், விருதுநகர், மதுரை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் கைத்தறி - விசைத்தறி மேம்பாட்டிற்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியிருப்பதுடன், இளைய தலைமுறையினரைக் கைத்தறித் தொழிலில் தொழில் முனைவோராக்கும் வகையில் 10 சிறிய கைத்தறிப் பூங்காக்கள் அமைத்திடவும், கோ-ஆப்டெக்ஸ் மூலமாக நெசவாளர்களின் திறன்களை மேம்படுத்தவும், விசைத்தறி உற்பத்தித் திறனை அதிகரிக்க மின்னணுப் பலகைகள் நிறுவ மானியம் வழங்கியும், நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்தை 300 யூனிட்டாக உயர்த்தியும், பட்டு நெசவு உற்பத்திக்கான கட்டமைப்புகளை மேம்படுத்தியும் மனிதர்களின் மானம் காக்கும் நெசவாளர்கள் தங்கள் வாழ்வை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் வகையில் பல சாதனைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கிறது.

 

அதேபோல், தமிழ்நாடு மீனவர் நலவாரியம் வாயிலாக 19,997 பயனாளிகளுக்குப் பல்வேறு நிவாரணம் மற்றும் உதவித்தொகை திட்டங்களின்கீழ் ரூ.25.68 கோடியை வழங்கியதுடன், கடந்த நான்காண்டுகளில் 121 மீன்வள உட்கட்டமைப்புப் பணிகளுக்காக மொத்தம் ரூ.1,849 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 2023-ஆம் ஆண்டு இராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவ மக்களுக்கான சிறப்பு மாநாட்டில் கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொண்டு, 1,000 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான மீனவர் நலத்திட்டங்களை அறிவித்து அவற்றைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளார். இப்படி, ஒவ்வொரு சமுதாயத்துக்கும் பார்த்து பார்த்து திட்டங்களைச் செயல்படுத்துகிற மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கப் பரப்புரை செய்வோம்!

 

 

 

தீர்மானம் : 5

 

தமிழினத்திற்குப் பெருமை சேர்த்த

 

தலைவர்களைப் போற்றும் கழக அரசுக்குப் பாராட்டு!

 

 

 

தமிழ்மொழிக்கும் - இனத்திற்கும் - பண்பாட்டிற்கும் தொண்டாற்றிய தகைசால் தலைவர்களையும், இந்திய ஒன்றிய மக்களால் மதிக்கப்படும் தலைவர்களையும் பாராட்டிப் போற்றுவதில் தி.மு.கழக அரசே எந்நாளும் முன்னோடியாகத் திகழ்கிறது. பேரறிஞர் அண்ணா ஆட்சியில் கடற்கரையில் நிறுவப்பட்ட தமிழ்ச்சான்றோர் சிலைகள், முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் குமரி முனையில் அமைக்கப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை, பல தலைவர்களுக்கான நினைவிடங்கள் - மணிமண்டபங்கள் - திருவுருவச் சிலைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து, கடந்த 4 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு தலைவர்களின் நினைவையும் அவர்தம் புகழையும் போற்றும் விதத்தில் சிலைகளும் நினைவரங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன. எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் உத்தமர் காந்தியடிகள், சிந்துவெளி ஆய்வை வெளியிட்ட சர் ஜான் மார்ஷல் ஆகியோருக்குச் சிலை, அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது முழு உருவச் சிலை, கிண்டி காந்தி மண்டபத்தில் திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதருக்குச் சிலையுடன் மணிமண்டபம், காந்தி மண்டப வளாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி ஆகியோருக்குச் சிலைகள், உத்தரபிரதேச மாநிலம் காசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லம் நினைவிடமாக்கப்பட்டு அவருக்கு மார்பளவுச் சிலை, வன்னிய சமுதாயத்தின் இடஒதுக்கீட்டிற்கான போராட்டத்தில், அன்றைய ஆட்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சமூகநீதித் தியாகிகளுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் சிலைகளுடன் மணிமண்டபம், பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பிரமலைக் கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த 14 தியாகிகளுக்கான நினைவு மண்டபம், திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், எம்.கே.தியாகராஜ பாகவதர் ஆகியோருக்கு மணிமண்டபங்கள், முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி அவர்களுக்குச் சிலையுடன் அரங்கம், கடலூரில் விடுதலைப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் சிலை, திரு.இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபம், மயிலாடுதுறையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் சிலை, புதுக்கோட்டையில் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் சிலை, நாமக்கல் ஜேடர்பாளையத்தில் அல்லாள இளைய நாயகர் சிலை, திரு. டி.எம்.சௌந்திரராசன், டாக்டர் ப.சுப்பராயன், நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கனார், விடுதலைப் போரில் களம் கண்ட வீரமங்கை வேலுநாச்சியார், வீராங்கனை குயிலி, வீரன் சுந்தரலிங்கம், வீரன் வெண்ணி காலாடி, வீரன் வாளுக்கு வேலி அம்பலம், தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்ப நாயக்கர் சிலை, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங், கவியரசர் இரவீந்திரநாத் தாகூர், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம், வீரமாமுனிவர், இனமானப் பேராசிரியர், நாவலர் நெடுஞ்செழியன், ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ், எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உள்ளிட்ட பலரது தியாகத்தையும் தொண்டையும் புகழையும் மதித்துப் போற்றி சிலைகளும் நினைவிடங்களும் அமைத்தததோடு, வைக்கத்தில் தந்தை பெரியார் நினைவகத்தைப் புதுப்பித்து, பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாளில் தமிழ் வார விழா கொண்டாடி, குமரியின் வள்ளுவ முனையில் வானுயர எழுந்து நிற்கும் அய்யன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை கொண்டாடிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான கழக அரசுக்கு இப்பொதுக்குழு பாராட்டுகளைத் தெரிவித்து, திராவிட மாடல் ஆட்சியில் தற்போது அமைக்கப்பட்டு வரும் திருவாளர்கள் பி.கே.மூக்கையா தேவர், டபிள்யூ.பி.ஏ.சௌந்திரபாண்டியனார், சி.சுப்பிரமணியம், பொள்ளாச்சி மகாலிங்கம், கே.பழனிசாமி கவுண்டர், புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான், மாயூரம் வேதநாயகம், பெரியவர் இளையபெருமாள், திரு.இமானுவேல் சேகரன், தோழர் ப.ஜீவானந்தம், கொடிகாத்த குமரன், மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி, அறிவியலாளர் ஜி.டி.நாயுடு, தமிழ் அச்சுத்துறையின் முன்னோடி சீகன் பால்கு, பட்டுக்கோட்டை வை.நாடிமுத்து பிள்ளை, பால்வளத் தந்தை எஸ்.கே.பரமசிவன் அய்யா, கரூர்  சி.முத்துசாமி ஆகியோருக்கான சிலைகள் மற்றும் அவர்கள் பெயரிலான நினைவிடங்கள், மாமேதை கார்ல் மார்க்ஸ், சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ ஆகியோருக்குத் திருவுருவச் சிலைகள் என சிறப்பு செய்யும் மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான அரசை வாழ்த்தி, நாடும் மொழியும் மானுட சமுதாயமும் சிறந்து வாழ, நாளும் உழைத்தவர்களின் நினைவை இப்பொதுக்குழு போற்றிப் புகழ்கிறது.

 

தீர்மானம் : 6

 

 

 

ஒவ்வொரு குடும்பமும் பயன் பெற்றுள்ள திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களைத் தொடர்ந்து மக்களிடம் எடுத்துரைப்போம்!

 

 

 

திராவிட நாயகராம் நம் கழகத் தலைவர் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அன்றே,

 

=  மகளிர் கட்டணமில்லாமல் பேருந்துகளில் பயணம் செய்யும் விடியல் பயணம் திட்டத்திற்குக் கையெழுத்திட்டு,

 

அதன் தொடர்ச்சியாக அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் -

 

=  ‘மக்களைத் தேடி மருத்துவம்’,

 

 

 

=  ‘இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48’

 

 

 

=  ஏழை-நடுத்தர மக்கள் அன்றாட - அத்தியாவசியத் தேவைக்குப் பயன்படுத்தும் மருந்துகளைக் குறைந்த விலையில் பெறுவதற்கேற்ற ‘முதல்வர் மருந்தகங்கள்’ போன்ற மகத்தான மருத்துவத் திட்டங்களையும்,

 

மாணவர் நலன் போற்றும் -

 

=  ‘முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்’

 

=  ‘நான் முதல்வன்’,

 

=  ‘இல்லம் தேடிக் கல்வி’,

 

=  ‘புதுமைப் பெண்’,

 

=  ‘தமிழ்ப் புதல்வன்’ உள்ளிட்ட கல்விக்கான சிறப்பான திட்டங்களையும்,

 

=  ஏறத்தாழ 30 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியும்,10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்தும் தமிழ்நாட்டின் தொழிற்புரட்சியைப் பெருக்கி,‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற இலட்சியத்துடன் அனைத்து சமுதாய மக்களின் மேம்பாட்டிற்கான திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தியும்,

 

=  அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்,

=  கலைஞரின் கனவு இல்லம்,

= வடசென்னை வளர்ச்சித் திட்டம்

 

- எனத் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் பயன்பெறும் வகையிலும், இந்தியாவின் பிற மாநிலங்கள் தமிழ்நாட்டைப் பார்த்து பின்பற்றக்கூடிய முறையிலும் திறன்மிக்க ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சாதனைத் திட்டங்களை, அவற்றால் பயன் பெற்றுள்ள மக்களிடம் எடுத்துரைத்து 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் வெற்றியை உறுதி செய்வோம் என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம் : 7

 

தமிழ்நாட்டின் எதிர்கால நம்பிக்கையாகமக்களின் பேராதரவைப் பெற்றுள்ளதுணை முதலமைச்சர் - இளம் தலைவர் அவர்களின்பணி தொடரத் துணை நிற்போம்!

மாநில இளைஞர் அணிச் செயலாளராக மாண்புமிகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொறுப்பு ஏற்றதும் கழகத்தில் புதிய இரத்தம் பாய்ச்சும் விதத்தில் பயிற்சிப் பாசறைகளை நடத்தியும், அதன் தொடர்ச்சியாக சுமார் 200 இளம் பேச்சாளர்களை உருவாக்கி மாநிலம் முழுவதும் பொதுக்கூட்ட பரப்புரைகளில் பங்கேற்கச் செய்தும், தொகுதி தோறும் கலைஞர் நூலகங்கள் எனத் தற்போது வரை 100-க்கும் அதிகமான நூலகங்கள் இளைஞர் அணியால் உருவாக்கப்பட்டுள்ளன. முத்தமிழறிஞர் பதிப்பகம் ஏற்படுத்தி அதன் மூலம் 20-க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியீடு; இளம் பேச்சாளர்கள் பயிற்சி முகாம்கள், தொகுதிதோறும் பாக முகவர்கள் பயிற்சிக் கூட்டங்கள் நடத்தி வருவது; இளைஞர் அறக்கட்டளை மூலம் மாதந்தோறும் நலிந்தோர் சுமார் 15 பேர்க்குக் குறையாமல் கல்வி, மருத்துவ நிதி அளித்து உதவி வருவது, இளைஞர் அணி சார்பில் முரசொலி ஏட்டில் நாள் தோறும் ‘பாசறைப் பக்கம்’ எனும் தலைப்பில் ஒருபக்க அளவில் திராவிட இயக்க வரலாறுகளையும், கழக இலட்சியப் பயணத்தின் தியாக வரலாற்றையும் உயிரோட்டத்துடன் பதிவு செய்து வருவது போன்ற சிறப்பான பணிகளை இளைஞர் அணிச் செயலாளரான மாண்புமிகு துணை முதலமைச்சர் செய்து வருகிறார். திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை உணர்ந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்குத் துணையாக நின்று, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்தை நேர்த்தியான முறையில் மேற்கொள்வதுடன், தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்தி, பல்வேறு போட்டிகளை நடத்தி, விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கான வேலைவாய்ப்பையும் உறுதி செய்து, வலிமைமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்கி வரும் மாண்புமிகு துணை முதலமைச்சர் - கழகத்தின் இளம் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் செம்மாந்த பணிக்குத் துணை நிற்போம் என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம் : 8

ஏழை-எளிய மக்களை வதைக்கும் நகைக்கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும்!

ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு நெருக்கமான கார்ப்பரேட் முதலாளிகளுக்குக் கடன் வழங்குவதில் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், உழவர்கள் - மாணவர்கள் உள்ளிட்டோரின் கடன் தொடர்பாகக் கெடுபிடியான நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஏழை-எளிய மக்கள் தங்கள் அவசரத் தேவைகளுக்காக வங்கியில் கடன் பெறுவதற்குத் தங்களிடமுள்ள தங்க நகைகளையே நம்பியுள்ள நிலையில், கடனில் உள்ள நகைகளை மறு அடகு வைப்பதற்கு முழுத் தொகையையும் கட்ட வேண்டும் என்றும், அடமானம் வைக்கப்படும் தங்க நகைகளின் உரிமை குறித்த ஆவணம் கட்டாயம் என்றும், தங்க நகையின் மதிப்பில் 75%  மட்டுமே கடனாக வழங்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ள கட்டுப்பாடுகள் இந்தியாவில் வாழும் ஏழை-எளிய மக்களைப் பெரிதும் பாதிக்கக்கூடியதாகும். குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வங்கிகளுக்குப் பதில், அதிக வட்டி வசூலிக்கும் தனியார் முதலாளிகளுக்கு லாபம் தரக்கூடிய இந்தக் கெடுபிடிகளை, ஒன்றிய அரசு வலியுறுத்தி, ரிசர்வ் வங்கியைத் திரும்பப் பெறச் செய்து, பழைய முறையிலேயே தங்க நகைக் கடன் பெற ஆவன செய்ய வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒன்றிய நிதியமைச்சர் அவர்களுக்கும், ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும் கடிதம் எழுதியுள்ளார். அவரது கோரிக்கையையும் - மக்களிடம் எழுந்த எதிர்ப்பையும் அடுத்து, அதிலிருந்து சற்றே பின்வாங்கியிருக்கின்றனர். ஆனாலும், ரூ.2 இலட்சத்திற்கும் மேலான கடன்களுக்கு முன்மொழியப்பட்டு விதிமுறைகள் பொருந்தும் என்றளவில் தற்போது உள்ளது.  எனவே, உச்சவரம்பை நீக்கிட வேண்டும் எனவும் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கோரிக்கைகளை முழுமையாக ஏற்று உரிய தீர்வை வழங்கி ஏழை, நடுத்தர மக்களின் இன்னலைப் போக்கிட வேண்டும் என இந்தப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் : 9

 

தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும்

 

ஒன்றிய அரசுக்குக் கண்டனம்!

மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசின் கல்வி நிதி ரூபாய் 2,152 கோடி வழங்கப்படும் என்று மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பா.ஜ.க. அரசின் நிலைப்பாட்டை, இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கும் தமிழ்நாட்டில் ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிரகடனப்படுத்தி எச்சரிக்கை செய்துள்ளார். ஒத்திசைவுப் பட்டியலிலுள்ள கல்வித்துறையை ஒட்டுமொத்தமாக கபளீகரம் செய்ய நினைக்கும் ஒன்றிய அரசுக்கும் அது வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கைக்கும் எதிரான சட்டப்போராட்டத்தையும் தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கியிருக்கிறார். பாரபட்சமாகச் செயல்படும் ஒன்றிய அரசை இந்தப் பொதுக்குழு கண்டிக்கிறது.

அதோடு, 15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கக்கூடிய வரிவருவாய்ப் பங்கினை 41% -ஆக வழங்காமல், 33.16% மட்டுமே வழங்கும் ஒன்றிய அரசைக் கண்டிப்பதோடு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் வலியுறுத்தியபடி, வரிப் பகிர்வின் பங்கை 50%-ஆக உயர்த்திட வேண்டும் எனவும் இந்தப் பொதுக்குழு வலியுறுத்துகிறது!

 

தீர்மானம் : 10

 

தமிழர்களின் மொழி உணர்வுடன் விளையாடாமல்

இந்தித் திணிப்பைக் கைவிடுக!

பள்ளிகளில் மும்மொழித் திட்டம், ஒன்றிய அரசு அலுவலகங்களில் இந்தி ஆதிக்கம், ஒன்றிய அரசு நிறுவனங்களில் மாநில மொழிகளுக்கு இடமின்றி இந்தி பேசுவோரையே நியமிப்பது, ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு இந்தி-சமஸ்கிருதப் பெயர்கள் என எல்லா வகையிலும் இந்தித் திணிப்பை மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு மேற்கொண்டு வருவது இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட மொழி - பண்பாட்டிற்குப் பேராபத்தை விளைவிக்கக் கூடியதாகும். இந்தி மொழித் திணிப்பால் கடந்த 75 ஆண்டுகளில் இந்தியாவில் 52 மொழிகள் அழிந்து விளிம்பு நிலையில் உள்ளன என்றும், இந்தி பெல்ட்டு பகுதியில் 25 மொழிகள் அழிந்து போயின என்றும், வழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூபாய் 1488 கோடியும், எட்டு கோடி மக்கள் பேசும் தமிழுக்கு ரூபாய் 74 கோடி மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது என்றும் ஒன்றிய அரசை எதிர்த்துக் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து கண்டித்து வருகிறார்.

ஒன்றிய அரசின் 97 துறைகளில் வெறும் 16 துறைகளில் மட்டும்தான் இந்தியும், ஆங்கிலமும் உள்ளன. மற்ற துறைகளில் இந்தி மட்டும் ஆட்சி செய்கிறது. இந்தச் சூழலில் மேலும் இந்தித்திணிப

 

Tags :

Share via