1ரூபாய்க்கு பிரியாணி.. களைகட்டிய திண்டுக்கல்.

by Editor / 25-08-2021 08:48:03pm
1ரூபாய்க்கு பிரியாணி.. களைகட்டிய திண்டுக்கல்.

திண்டுக்கல்லில் பழைய ஒரு ரூபாய் நோட்டுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டதால் ஏராளமானோர் திரண்டு வாங்கி சென்றனர். திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள சிறுமறை பிரிவில் புதிய பிரியாணி ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது.இதையடுத்து திண்டுக்கல் நகர் முழுவதும் பழைய ஒரு ரூபாய் நோட்டுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி என்று அதிரடி சலுகை அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் சமூக வலைதளங்களிலும் விளம்பரங்கள் செய்யப்பட்டன.

இதையடுத்து ஏராளமானோர் திரண்டு பழைய ஒரு ரூபாய் நோட்டை கொடுத்து பிரியாணி வாங்கி சென்றனர். பிரியாணியுடன் கேசரி தயிர், வெங்காய பச்சடி, கோழி குழம்பு ஆகியவையும் வழங்கப்பட்டது. அந்த வழியாக சென்ற அரசு பேருந்து நடத்துனர்கள் பேருந்தை நிறுத்தி விட்டு ஒரு ரூபாய் நோட்டை கொடுத்து பிரியாணி . வாங்கி சென்றனர். பிரியாணி வாங்க வந்த அனைவருக்கும் ஒரு முகக் கவசம் இலவசமாக வழங்கப்பட்டது.

 

Tags :

Share via