கடன் தொல்லை.. சுற்றுலாப் பயணிகள் கண் முன்னே விவசாயி தற்கொலை

by Editor / 06-06-2025 04:24:08pm
கடன் தொல்லை.. சுற்றுலாப் பயணிகள் கண் முன்னே விவசாயி தற்கொலை

தெலங்கானா மாநிலத்தில், கடன் தொல்லை காரணமாக விரக்தியில் இருந்த விவசாயி, சுற்றுலாப் பயணிகள் கண் முன்னே நீர்வீழ்ச்சியில் மூழ்கி உயிரிழந்தார். ஆதிலாபாத் மாவட்டம் தேஜாபூர் கிராமத்தைச் சேர்ந்த நர்சா ரெட்டி (58) என்ற விவசாயி கடன் வாங்கியுள்ளார். பின்னர், பயிர் விளைச்சல் குறைவாக இருந்ததால் தனது காளைகளை விற்று, கடனை அடைத்துள்ளார். இருந்தபோதிலும் ரூ. 13 லட்சம் கடனை அடைக்க வழியில்லாமல், போச்சாரா நீர்வீழ்ச்சியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
 

 

Tags :

Share via

More stories