கீழடிஉள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வுப் பணிகள்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.

by Staff / 18-06-2025 08:53:48am
கீழடிஉள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வுப் பணிகள்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.

கீழடி 10-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் இன்று (ஜூன் 18) தொடங்குகிறது. இந்தப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். வெம்பக்கோட்டை, திருமலாபுரம் உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வுப் பணிகள் தொடங்குகிறது. இதற்கு முன்பு நடந்த இந்த அகழாய்வுப் பணிகளின் போது சூது பவளம், உறை கிணறுகள், முதுமக்கள் தாழி, தமிழ் பிராமி எழுத்துக்கள், தங்கம், வெள்ளி, இரும்பு, பாசி மணிகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பகடைக்காய் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.

 

Tags : கீழடிஉள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வுப் பணிகள் தொடங்குகிறது.

Share via