மைசூருவில் கூட்டு பாலியல்: போலீசாரிடம் வாக்குமூலம் அளிக்காமல் குடும்பத்துடன் மாநிலத்தை விட்டே சென்ற பாதிக்கப்பட்ட பெண்!

by Admin / 30-08-2021 01:14:17pm
மைசூருவில் கூட்டு பாலியல்: போலீசாரிடம் வாக்குமூலம் அளிக்காமல் குடும்பத்துடன் மாநிலத்தை விட்டே சென்ற பாதிக்கப்பட்ட பெண்!



மைசூருவில் கூட்டு பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் வாக்குமூலம் அளிக்காமல் குடும்பத்துடன் மாநிலத்தை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில்  கடந்த 24- ஆம் தேதி காதலனுடன் பேசிக் கொண்டிருந்த உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடன் தனது வாக்குமூலத்தை பதிவு செய்யாமலேயே தன் குடும்பத்துடன் மாநிலத்தை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. அப்பெண் அதிர்ச்சியில் இருந்ததால் முன்பே வாக்குமூலத்தை பெற முடியவில்லை என்றும் போலீசார் கூறுகின்றனர்.

 

Tags :

Share via