பாகிஸ்தானில் தொடர் மழையின் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு.

by Staff / 02-10-2025 10:49:48am
பாகிஸ்தானில் தொடர் மழையின் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு.

பாகிஸ்தானில் தொடர் மழையின் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1006 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 4 மாதங்களில் இந்த எண்ணிக்கையிலான மரணங்கள் ஏற்பட்டுள்ளன. மழை காரணமாக கைபர் பக்துன்குவா, பஞ்சாப், சிந்த் மற்றும் கில்ஜித் -பல்திஸ்தான் மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

 

Tags : பாகிஸ்தானில் தொடர் மழையின் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு

Share via