திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது..
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை காலை 10 மணியளவில் காணொலிக் காட்சி வாயிலாகதி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி SIR குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட உள்ளது. தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இக் கூட்டத்தில் அனைத்து மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் தொகுதிப் பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்..
Tags :


















