அன்புமணி வேட்பாளர் தேர்வு - நிதி விவகாரங்களில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு- ராமதாஸ் தரப்பு கவலை
அன்புமணி ராமதாஸ் தேர்தல் ஆணையத்திடம் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து பாமகவைக் கைப்பற்ற முயற்சிப்பதாக டாக்டர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார்.
அன்புமணி தனது தலைவர் பதவிக்காலத்தை 2026 வரை நீட்டித்துக்கொண்டது செல்லாது என்றும், இதற்காக 2023 பொதுக்குழு ஆவணங்களை 2022 எனத் தேதியிட்டு திருத்தி மோசடி செய்துள்ளதாகவும் ராமதாஸ் ஆதரவாளர் ஜி.கே. மணி குற்றம் சாட்டியுள்ளார்.
கட்சியின் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை சட்டவிரோதமாகப் பெற அன்புமணி முயல்வதாகவும், இதன் மூலம் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு மற்றும் அது தொடர்பான நிதி விவகாரங்களில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் ராமதாஸ் தரப்பு கவலை தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் அன்புமணியையே தலைவராக அங்கீகரித்துள்ள போதிலும், அவர் "தேர்தல் ஆணையத்தையே விலைக்கு வாங்கிவிட்டார்" என்று டாக்டர் ராமதாஸ் ஆவேசமாகப் பேசியுள்ளார். இந்த விவகாரம் தற்போது டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் நேரடி கவனத்தில் உள்ளது. பாமகவின் சின்னமான 'மாம்பழம்' யாருக்கு என்பதில் இன்னும் இறுதித் தீர்ப்பு எட்டப்படவில்லை.
Tags :



















