திட்டமிட்டபடி நாளை சட்டமன்ற முற்றுகை  போராட்டம் - தமிமுன் அன்சாரி அறிவிப்பு. 

by Editor / 10-10-2023 09:57:00pm
திட்டமிட்டபடி நாளை சட்டமன்ற முற்றுகை  போராட்டம் - தமிமுன் அன்சாரி அறிவிப்பு. 

தமிழக சிறைகளில் 20 வருடமாக இருக்கும் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி மஜக சார்பில் நாளை சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழக சிறைகளில் 20 வருடமாக உள்ள ஆயுள் கைதிகளை சாதி, மத பேதமின்றி விடுதலை செய்ய வேண்டும் என மஜக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. மஜகவும், இதர ஜனநாயக சக்திகளும் முன்னிறுத்தும் கோரிக்கையை தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கனவே அறிவித்தபடி நாளை சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்றார்.

 

Tags : திட்டமிட்டபடி நாளை சட்டமன்ற முற்றுகை  போராட்டம்

Share via