பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது-! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இன்று மதுராந்தகத்தில் நடந்த என். டி . ஏ பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி இரட்டை எஞ்சின்[ அ.தி.மு.க-பா.ஜ.ககூடடணியை]தமிழ்நாட்டில் ஓடும் என்று சொன்னதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு பதில் தரும் விதமாக எக்ஸ் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது!
மாண்புமிகு பிரதமர் அவர்களே…
ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது.
கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க…
நீங்கள் சொல்லும் “டபுள் எஞ்சின்” மாநிலங்களான உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பீகாரைவிட, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என உங்கள் “டப்பா எஞ்சின்” நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது.
தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும் #NDABetraysTN என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.
தில்லியின் ஆணவத்துக்குத் #தமிழ்நாடு_தலைகுனியாது!
Tags :



















