சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
பிப்ரவரி 8 அன்று நடக்கவிருக்கும் சூப்பர் பவுல் 60போட்டிக்கு முன்னதாக, சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.திங்கட்கிழமை காலை 7:01 மணியளவில் சான் ரமோன்பகுதியில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதிகாலை 6:27 மணி முதல் சுமார் 90 நிமிட இடைவெளியில் 30-க்கும் மேற்பட்ட சிறிய நிலநடுக்கங்கள் பதிவாகின.
இதில் பெரிய அளவில் உயிர் சேதமோ அல்லது கட்டிட சேதமோ ஏற்படவில்லை. இருப்பினும், சான் ரமோனில் உள்ள ஒரு கடையில் பொருட்கள் அலமாரிகளில் இருந்து கீழே விழுந்தன மற்றும் ரயில் சேவை முன்னெச்சரிக்கையாக தற்காலிகமாக மெதுவாக்கப்பட்டது.
இந்தப் போட்டி நடைபெறவுள்ள சாண்டா கிளாராவில் உள்ள லெவிஸ் மைதானத்தில் இருந்து சுமார் 32 மைல் தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. சூப்பர் பவுல் வாரத்தின் தொடக்கத்திலேயே இது நடந்ததால், அங்கு வந்துள்ள நியூ இங்கிலாந்து பேட்ரியட்ஸ் மற்றும் சீட்டில் சீஹாக்ஸ் அணி வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே இது பரபரப்பை ஏற்படுத்தியது
Tags :













.jpg)



