நர்ஸ் கொலை:கணவர் மனநலம் பாதிக்கபட்டவரா..?
கோவில்பட்டி நெல்லை செவிலியர் கொலை வழக்கில் சரண்டர் அடைந்துள்ள அக்பர் இப்ராஹிம் கடந்த 13.09.21அன்று அப்போதே கோவில்பட்டி நகர் பா.ஜ.க தலைவர் பாலசுப்பிரமணியன் என்பவரை அரிவாளால் காட்டி கொலை மிரட்டல் விடுத்தாக புகார் எழுந்தது. இதையடுத்து பாலசுப்பிரமணியம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதையடுத்து போலீசார் அக்பர் இப்ராஹிமை தேடி வந்தனர். அப்போது அவரது வீட்டை சோதனை செய்த போது சுவர்களில் பல்வேறு சங்கேத வார்த்தைகள்.. வரைபடங்கள்.. சைத்தானின் நாடகம், பாவத்தின் சம்பளம் மரணம் என்ற வாசகங்கள் அடங்கிய பேப்பர்கள் சுவரில் ஒட்டப்பட்டு இருந்தன. மேலும் பிரதமர் மோடி.. விவேகானந்தர் படங்களும் ஒட்டப்பட்டு இருந்தன.. இதற்கிடையில் போலீசார் அக்பர் இப்ராஹிமை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று சான்றிதழ் வைத்து இருந்ததால் அப்போது போலீசார் வழக்கு பதிவு மட்டும் செய்து.. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் அங்கு அவர் 6 மாத சிகிச்சை பெற்றவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Tags :