அடுத்த 2.0 ஆட்சியில் கலைஞர் உரிமைத் தொகை 2,000 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்- முதலமைச்சர் மு க ஸ்டாலின்
திராவிட மாடல் 2.0 ஆட்சி கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை மாதம் 2000 ஆக உயர்த்தி வழங்குவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார் அவர் வெளியேற்ற முக்கிய அறிவிப்பு. அடுத்த முறை ஆட்சிக்கு வரும்போது தற்போது வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையானது 2,,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் இது தனது சகோதரிகளுக்கு தாம் வழங்குவதாகவும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி உரிமை தொகையை முடக்க பார்ப்பதாக குறிப்பிட்ட முதலமைச்சர் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான முன் பணம் 3,000 மற்றும் கோடைகால சிறப்பு தொகுப்பு 2,000 என மொத்தம் 5,000 இன்று பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்திற்கு பிறகு தற்போது சுமார் 1.31 கோடி பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
Tags :



















