“பொதுமக்களுக்கு இடையூறு கூடாது”.. தவெக தொண்டர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை
“பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், பதாகைகள் வைக்கக் கூடாது” என தவெக அமைச்சரும், பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் அறிவுரை வழங்கியுள்ளார். மேலும், “பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது” என அறிவித்துள்ளார்.
Tags :



















