தோழிகளை பிரிந்ததால் மாணவி தற்கொலை

by Staff / 11-07-2023 11:44:08am
தோழிகளை பிரிந்ததால்  மாணவி தற்கொலை திருப்பூர் மாவட்டம் &nbsp;வெள்ளகோவில் கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார். சுமைதூக்கும் தொழிலாளி இவருடைய மனைவி வளர்மதி. இவர்களது மகள் சந்தியா (17), தனியார் பள்ளியில் +2 படித்து வந்தார். இவருடைய தோழிகள் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். எனவே தன்னையும் அரசு பள்ளியில் சேர்க்குமாறு பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதற்கு பெற்றோர் மறுத்துவிட்டனர். இதனால் சந்தியா மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த சந்தியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என போலீசார் விசாரிக்கின்றனர். <br /> &nbsp;
 

Tags :

Share via