முதலமைச்சருக்கு எதிர்க்கட்சி தலைவர் கடிதம்
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 152 உயர்சிறப்பு மருத்துவ இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தவெக அரசு நீதிமன்றத்தில் முறையான வாதங்களை வைக்காததே இதற்குக் காரணம் எனச் சாடியுள்ள அவர், இது அரசு மருத்துவர்களையும் ஏழை எளிய மக்களுக்கான உயர்தர சிகிச்சையையும் கடுமையாகப் பாதிக்கும் என்பதால், முதல்வர் ஜோசப் விஜய் இதில் உடனடியாகத் தலையிட வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.
Tags :



















