-எல்லைப்புற நிர்வாகம், போதைப்பொருள் குறித்து வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா-பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

by Editor / 05-09-2022 11:42:58am
-எல்லைப்புற நிர்வாகம், போதைப்பொருள்  குறித்து  வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா-பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா 4 நாள் அரசு பயணமாக இன்று இந்தியா வருகிறார். அவருடன் உயர் அதிகாரிகள், வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழுவும் வருகிறது. ஷேக் ஹசீனாவை டெல்லியில் பிரதமர் மோடி வரவேற்கிறார். ஷேக் ஹசீனாவுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது. அவர் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை சந்திக்கிறார். டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடிக்கும், ஷேக் ஹசீனாவுக்கும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது. பாதுகாப்பு ஒத்துழைப்பு, முதலீடு, வர்த்தக உறவு, மின்சாரம், எரிசக்தி துறைகளில் ஒத்துழைப்பு, நதிநீர் பங்கீடு, நீர்வள மேலாண்மை, எல்லைப்புற நிர்வாகம், போதைப்பொருள் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via