சச்சின், புடின், இம்ரான் வெளிநாடுகளில் பல கோடி ரகசிய முதலீடு..  பண்டோரா ஆவணத்தில். திடுக்கிடும்  தகவல் 

by Editor / 04-10-2021 08:38:20pm
சச்சின், புடின், இம்ரான் வெளிநாடுகளில் பல கோடி ரகசிய முதலீடு..  பண்டோரா ஆவணத்தில். திடுக்கிடும்  தகவல் 


உலகின் பெரும் பணக்காரர்கள், கொள்ளையர்கள், மிகப்பெரிய டான்கள் பொதுவாக பனாமா, சைப்ரஸ், துபாய் உள்ளிட்ட நாடுகளில் பணம் பதுங்குவது உண்டு. பணம் பதுங்குவது என்றால் அங்கு இருக்கும் வங்கிகளில் பணத்தை முதலீடு செய்வது, அல்லது அந்த நாடுகளில் ஷெல் கம்பெனிகளில் முதலீடு செய்வது, அல்லது வேறு பல்வேறு வகைகளில் அந்த நாடுகளில் பணத்தை குவிப்பது. இது போன்ற நாடுகளில் வரி என்பது மிக மிக குறைவு.


இந்தியாவில் வரி கட்ட விருப்பம் இன்றி இது போன்ற நாடுகளில் பணத்தை பல பணக்காரர்கள் ரகசியமாக முதலீடு செய்வது உண்டு. இந்தியாவில் சொத்தை கணக்கு காட்டாமல், பனாமா போன்ற நாடுகளில் அதை பதுக்குவார்கள். இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு முறையாக பணக்காரர்கள் மூலம் வர வேண்டிய வரி வருவாய் வராமல் போகும்.


உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என பலர் வெளிநாடுகளில் முறைகேடுகளாகச் சொத்துக்களைப் பதுக்கிவைத்துள்ளதாகச் சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு (ICIJ) வெளியிட்டு பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

பண்டடோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியாகியிருக்கும் இந்த புலனாய்வில் இந்தியாவைச் சேர்ந்த 380க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இதில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர்கள் அனில் அம்பானி, நீரவ் மோடி உள்ளிட்டோரின் பெயர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. மேலும் உலக தலைவர்களின் பெயர்களும் இதில் உள்ளது.


குறிப்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கென்யா ஜனாதிபதி உஹுரு, செக் குடியரசு பிரதமர் ஆண்ட்ரேஸ் பாபிஸ், ஜோர்டான் மன்னர் அப்துல்லா, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மற்றும் பாப் இசை பாடகி ஷகிரா, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆகியோர் வரி ஏய்ப்பு மற்றும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சச்சின், அனில் அம்பானி...  முறைகேடாகச் சொத்துகள் சேர்த்த 380 இந்தியர்கள் ?: புயலைக் கிளப்பும் Pandora!
அதில் ஜோர்டான் மன்னர் அப்துல்லா அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை ரகசியமாக குவித்துவைத்திருப்பதாக இந்த புலனாய்வில் தெரியவந்துள்ளது. வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி கடன்பட்டிருக்கும் இந்தியர்கள், தங்களின் சொத்துக்களைக் கணிசமான பகுதியைக் கடல் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இந்த புலனாய்வில் 117 நாடுகளிலிருந்தது 150க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சேகரித்த தகவல்களைத் தான் தற்போது `பண்டோரா பேப்பர்ஸ்' என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 2016ம் ஆண்டு பனாமா பேப்பர் என்ற பெயரில் பலரின் முறைகேடுகள் குறித்து தகவல்கள் வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது `பண்டோரா பேப்பர்ஸ்' வெளிவந்துள்ளதாகக் கருதப்படுகிறது.


உலக வரலாற்றில் மிகப்பெரிய பண்டோரா ஆவண லீக் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் முன்னணி 150 செய்தி நிறுவனங்களுடன் ஐசிஐஜே இந்த ஆவணங்களை பகிர்ந்து உள்ளது. மொத்தம் 11.9 மில்லியன் ஆவணங்கள் இதில் இடம்பெற்று இருப்பதாக ஐசிஐஜே தெரிவித்துள்ளது. இந்த ஆவணங்களில் உலகின் பல முக்கிய புள்ளிகள் பணம் பதுக்கியதும், ரகசிய முதலீடு செய்ததும் அம்பலம் ஆகியுள்ளது. 91 நாடுகளின் பிரபலங்கள் இப்படி பண பதுக்கல் செய்துள்ளனர். பெல்சி, சிங்கப்பூர், ஸ்விட்சர்லாந்து, பனாமா, பார்ப்டோஸ், சைப்ரஸ், துபாய், பஹாமாஸ், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், வியட்நாம் ஆகிய நாடுகளில் முதலீடு செய்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பே இதேபோல் தி பனாமா, பாரடைஸ் பேப்பர்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் வெளியாகி இருந்தது. இதற்கு முன் 2016, 2017ல் இந்த ஆவணங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இப்போது மீண்டும் அதே பண்டோரா பூதம் கிளம்பி உள்ளது. இந்த ஆவணங்களை ஐசிஐஜே அமைப்பிற்கு கொடுத்தது யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.சச்சின் வழக்கறிஞர் இந்த புகார்களை மறுத்து இருக்கிறார். சச்சினின் முதலீடு எல்லாம் நேர்மையான முறையில் செய்யப்பட்ட முதலீடு என்று அறிவித்துள்ளார். இந்த பண்டோரா ஆவணங்கள் சர்வதேச அளவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

Tags :

Share via