பாளையங்கோட்டை அருகே தந்தை-மகன் கொலை 

by Reporter / 12-10-2021 04:58:32pm
பாளையங்கோட்டை அருகே தந்தை-மகன் கொலை 

 

 பாளையங்கோட்டை அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வாலிபரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .


இந்நிலையில் அந்த வாலிபரின் தந்தை மர்மமான முறையில் மரணம் அடைந்ததால் அவரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதுபாளையங்கோட்டையை அடுத்து உள்ளது கிருஷ்ணாபுரத்தை அடுத்த நொச்சிகுளம்  மேட்டு தெரு பகுதியில் வசிப்பவர் கோதர்( 28 )நேற்று காலை கோதர் வீட்டில் இருந்த பொழுது அத்துமீறி உள்ளே நுழைந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி அதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார் ..


இதுகுறித்து தகவலறிந்த சிவந்திபட்டி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் கோதரின் தந்தை மீன் வியாபாரியான பீர் மைதீன்என்பவர் கல்வெட்டான் குளத்தில் பிணமாக கிடந்தது குறிப்பிடத்தக்கது 

ஒருவேளை மகனை கொலை செய்த கும்பலை அவரையும் கொலை செய்து குளத்தில் வீசி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது சிவந்திபட்டி போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்

 

Tags :

Share via