அரசுப் பணிகளுக்கு இனி நேர்முகத் தேர்வு இல்லை

by Editor / 28-06-2021 08:58:50am
அரசுப் பணிகளுக்கு இனி நேர்முகத் தேர்வு இல்லை

ஆந்திரம் மாநிலத்தில் குரூப் -1 பதவிகள் உள்பட அனைத்து அரசுப் பணிகளுக்கு இனி நேர்முகத் தேர்வு இல்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

அரசு வேலைவாய்யப்பு ஆள்சேர்ப்பு பணியில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான ஒரு முயற்சியின் ஒரு பகுதியாக, 2019 -ஆம் ஆண்டு அக்டோபர் 17 -ஆம் தேதி நடைபெற்ற தேர்வாணைய உயர்மட்டக் கூட்டத்தின் பரிந்துரையின் அடிப்படையில், ஆந்திர அரசு பணியாளர் தேர்வாணையம் அனைத்து அரசு பணிகளுக்கான நேர்முகத் தேர்வுகளையும் ரத்து செய்ய அரசுக்கு பரிந்துரை செய்தது.

இந்த பரிந்துரையின் அடிப்படையில் குரூப்-1 உள்ளிட்ட அனைத்து அரசுப்பணி தேர்வுகளுக்கான நேர்முகத் தேர்வை ரத்து செய்து ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, ஆந்திர மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்து அரசுப் பணி தேர்வுகளிலும் இனிமேல் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படாது.

தேர்வு நடைமுறையின் மீதான நம்பகத்தன்மையையும், வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்ய நடவடிக்கையாக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பணிகளுக்கு இனி நேர்முகத் தேர்வு இல்லை
 

Tags :

Share via