ஜெயலலிதாவுக்கான ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம்.-ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையில்

by Staff / 18-10-2022 12:52:55pm
 ஜெயலலிதாவுக்கான ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம்.-ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையில்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவில், சசிகலா உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் என ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை.சசிகலா வெளியேற்றப்பட்டு, 2012ல் மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்ததிலிருந்து அவர்கள் இருவருக்கும் இடையே சுமுக உறவு இல்லை. சசிகலாவைக் குற்றம் சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது.அமெரிக்காவில் இருந்து வந்த டாக்டர் சமீன் சர்மா, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருந்தார். ஆனால்  அது  நடக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு   ஆஞ்சியோ  சிகிச்சை  அளிக்கவிடாமல்  சசிகலா  தடுத்துள்ளார். சசிகலா - ஜெயலலிதா இருவர் இடையே சுமூக உறவு இல்லாததால், சுயலாபத்துக்காக ஜெயலலிதாவுக்கான ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம். 2016 டிச. 5 இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார்  என  அப்போலோ மருத்துவமனை அறிவித்திருந்தது. சாட்சியங்கள் அடிப்படையில் ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 4ம் தேதி மதியம்  3 மணி முதல் 3.30 மணிக்குள் இருக்கலாம். சசிகலா, கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை  அமைச்சர் சி.விஜயபாஸ்கர்  ஆகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு. இவர்கள் மீதான விசாரணைக்கு ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை.

 

Tags :

Share via