கண்ணில் பட்டோர் மீது தாக்குதல் நடத்திய காவலர்கள்

by Staff / 18-10-2022 12:42:45pm
கண்ணில் பட்டோர் மீது தாக்குதல் நடத்திய காவலர்கள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து கண்ணில் பட்டோரையெல்லாம் காவலர்கள் தாக்கியுள்ளனர் என்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை எச்சரிக்கும் விதமாக அவர்களுக்கு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடிக்கொண்டிருக்கும்போதே அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via