திசைதிருப்பும் ஐபிஎல் தேவையா? - கில்கிறிஸ்ட்

by Editor / 24-07-2021 09:04:40am
திசைதிருப்பும் ஐபிஎல் தேவையா? - கில்கிறிஸ்ட்

ஆஸ்திரேலிய முன்னாள் அதிரடி வீரரும் ஐபிஎல் தொடரில் விளையாடியவருமான ஆடம் கில்கிறிஸ்ட்டும், ஐபிஎல் தொடர் தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், இந்தியர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன். கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகுந்த பயத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் அங்கு நடைபெறும் ஐபிஎல் தொடர் பொருத்தமற்றது இல்லையா? அல்லது மக்களைத் திசைதிருப்பவே போட்டிகள் நடத்தப்படுகிறதா? எதுவாயினும் இந்தியர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

திசைதிருப்பும் ஐபிஎல் தேவையா? - கில்கிறிஸ்ட்
 

Tags :

Share via