உத்திரப்பிரதேச வன்முறை விவகாரம்... விசாரணையை தொடங்கியது புலனாய்வு துறை..

by Admin / 16-10-2021 09:55:56pm
உத்திரப்பிரதேச வன்முறை விவகாரம்... விசாரணையை தொடங்கியது புலனாய்வு துறை..

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வு துறை அதிகாரிகள் தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
 
லக்கிம்பூர் பகுதியில் கடந்த 3-ஆம் தேதி பேரணியை முடித்து விட்டு திரும்பிய விவசாயிகள் மீது மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில் ஒரு பத்திரிகையாளர் உட்பட மேலும் 5 பேர் கொலை செய்யப்பட்டனர்.

நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்தில் தொடர்புடைய ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.
 
இவ்வழக்கு தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ள சிறப்பு புலனாய்வு துறை அதிகாரிகள், லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு இணையமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். நடந்த சம்பவத்தை நடித்துக் காட்டச் சொல்லி விசாரணை நடத்தப்பட்டது.

 

Tags :

Share via