"காஷ்மீர விட்டு வெளியே போங்க" - லஷ்கர் பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை
ஸ்ரீநகர் புறநகர் பகுதியான சங்கம் இட்கா என்ற இடத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் சில வாரங்களுக்கு முன்பு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மட்டும் இருந்தனர். அந்தப் பள்ளியில் துப்பாக்கிகளோடு புகுந்த பயங்கரவாதிகள் இருவரையும் பயங்கரமாக சுட்டுக் கொன்றனர். அதேபோல பீகாரைச் சேர்ந்த இரண்டு புலம்பெயர் தொழிலாளர்களையும் சுட்டு வீழ்த்தினர். இதனால் பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பயங்கரவாதிகளைக் கண்டறிந்து பதில் தாக்குதல் தொடுக்க இந்திய ராணுவமும் ஜம்மு காஷ்மீர் காவல் துறையும் முடிவெடுத்தது. அதன்படி பயங்கரவாதிகள் இருக்கும் பகுதிகளில் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆபரேஷன் முடிவுக்கு வந்துள்ளது. அதில் 13 பயங்கரவாதிகள் என்கவுண்டர் செய்யப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் ஐஜி விஜயகுமார் ஊடகங்களிடம் தெரிவித்தார். இச்சூழலில் மேலும் 2 பீகார் தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பீகார் தொழிலாளிகள் கொலைக்கு லக்ஷர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்கே இந்தக் கொலைகளைச் செய்தததாகவும் கூறியுள்ளது.
Tags :