10 ஆயிரம் சப்பாத்தி, தக்காளி தொக்கு பொட்டலம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த 17, 18 தேதிகளில் வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில், ஈரோடு பவானி நகர பொதுமக்கள் பொருட்களாகவும் பணமாகவும் நிவாரண உதவிகளை வழங்கினர். இதனைத் தொடர்ந்து, தலா 3 சப்பாத்திகள் கொண்ட 10,000 பொட்டலங்கள் தயாரித்து வழங்க முடிவு செய்யப்பட்டது. சமையல் காண்ட்ராக்டர் ஆர்.ஆர்.சரவணன் மற்றும் 50 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை முதல் இப்பணியில் ஈடுபட்டனர். சப்பாத்தி, தக்காளி தொக்கு பொட்டலம் கட்டப்பட்டு, நேற்று இரவு வாகனம் மூலம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Tags : , ஈரோடு பவானி நகர பொதுமக்கள்