மூத்த பஞ்சாயத்துத் தலைவி 90 வயது மூதாட்டி பதவியேற்பு

by Editor / 20-10-2021 05:54:21pm
மூத்த பஞ்சாயத்துத் தலைவி 90 வயது மூதாட்டி பதவியேற்பு

 

தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், வெற்றி பெற்ற பஞ்சாயத்துத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஒன்றியத் தலைவர்கள் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.இந்த நிலையில் தமிழ்நாட்டின் மிக மூத்த பஞ்சாயத்துத் தலைவியாக நெல்லையைச் சேர்ந்த மூதாட்டி பெருமாத்தாள் (90) பதவி ஏற்றார்.


 பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிவந்திபட்டி ஊராட்சி மன்றத்தலைவராக போட்டியிட்ட மூதாட்டி பெருமாத்தாள், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்தார்.மொத்தம் 2,060 வாக்குகள் பதிவான நிலையில் 1,568 வாக்குகள் பெற்று பெருமாத்தாள் வெற்றி பெற்றார். அடுத்தபடியாக செல்வராணி 440 வாக்குகளும் உமா 72 வாக்குகளும் பெற்றனர்.

 

Tags :

Share via