நிலச்சரிவால் அலறி ஓடிய மக்கள்

by Staff / 05-05-2023 01:36:49pm
நிலச்சரிவால் அலறி ஓடிய மக்கள்

உத்தரகாண்ட் மாநிலத்தின் பத்ரிநாத் பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான பக்தர்கள் வாகனங்கள் மூலம் ஹெலாங்கை அடைந்தனர். இந்த நிலையில், நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையை கடக்க முடியாமல் அங்கேயே சிக்கிக்கொண்டன. பக்தர்கள் அப்பகுதியில் திரண்டு நின்ற வேளையில், திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு சாலை முழுவதும் மூடியது. நிலச்சரிவு காரணமாக வாகனங்களில் இருந்த பக்தர்கள் வெளியே ஓடி வந்தனர். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. தற்போது பத்ரிநாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via