22 வயது பஞ்சாயத்து தலைவி பொறுப்பேற்பு

by Editor / 20-10-2021 06:01:54pm
22 வயது பஞ்சாயத்து தலைவி பொறுப்பேற்பு

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக ஸாருகலா தனது 22ஆவது வயதில் பதவியேற்றுக்கொண்டார். நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பல படித்த இளைஞர்கள் வெற்றி பெற்றனர். அந்தவகையில் தென்காசி மாவட்ட கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து தலைவராக ஸாருகலா (22) பதவியேற்றுக்கொண்டார்.


லட்சுமியூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி சுப்பிரமணியன் என்பவரது மகளான ஸாருகலா, தனது பொறியியல் படிப்பை சென்ற ஆண்டு நிறைவு செய்துள்ளார். தொடர்ந்து முதுநிலை பொறியியல் படிப்பை பயின்றுவரும் கல்லூரி மாணவியாக உள்ளார்.

 

Tags :

Share via