ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் ஊஞ்சல் திருவிழா

by Editor / 25-10-2021 04:53:14pm
 ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில்  நம்பெருமாள் ஊஞ்சல் திருவிழா

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் ஊஞ்சல் திருவிழா தொடங்கியது.
நவம்பர் 1 வரை 9 நாள்கள் நடைபெறும் விழாவில் நாள்தோறும் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அதன்படி விழாவின் முதல் திருநாளான ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்துக்கு எதிரிலுள்ள நாலுகால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளி, ஊஞ்சல் மண்டபத்துக்கு 5.30-க்கு வந்து சேர்ந்தார். தொடர்ந்து இரவு 7.15-க்கு உபயநாச்சியார்களுடன் ஊஞ்சலில் நம்பெருமாள் எழுந்தருளி, மங்கள ஆரத்தி கண்டருளி 8.15 வரை ஊஞ்சலில் ஆடியவாறு இருபுறமும் வெண்சாமரம் வீச மங்களவாத்தியத்துடன் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

பின்னர் 9 மணிக்கு அவர் புறப்பட்டு 9.15-க்கு மூலஸ்தானம் சென்று சேர்ந்தார். 7 ஆம் திருநாளான வரும் 30 ஆம் தேதி நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சியும் 9 ஆம் திருநாளான நவ. 1 ஆம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.  தங்கத் தேரோட்டம் நடைபெற்றது.

 

Tags :

Share via