இந்தியாவில் கொரோனோ பலி  எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது

by Editor / 28-04-2021 06:43:12pm
இந்தியாவில் கொரோனோ பலி  எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்க 3 லட்சத்து 60 ஆயிரத்து 960 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனோவின் இரண்டாவது அலை காரணமாக மக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். ஒரு பக்கம் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக பல்வேறு மாநிலங்களில் நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். இன்னொருபுறம் நோயாளிகள் படுக்கை வசதி இல்லாமல் ஆம்புலன்ஸ், சாலை போன்ற இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரம் .
3,60,960 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2,61,162 பேர் குணமடைந்துள்ளனர்.
3293 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை மொத்தம் விவரம்.
1,79,97,267 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1,48,17,371 பேர் குணமடைந்துள்ளனர்.
2,01,187 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது 29,78,709 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 14,78,27,367 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via