கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் பலி எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளது.

by Editor / 24-06-2024 08:23:52am
 கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் பலி எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த சிறுவங்கூரைச் சேர்ந்த 34 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து பலரும் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கள்ளச்சாராய விவகாரத்தில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்

Share via