கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை:ட்ரோன் கேமிரா மூலம் கண்டுபிடித்த காவல்துறை.

by Editor / 08-10-2023 10:56:12am
கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை:ட்ரோன் கேமிரா மூலம் கண்டுபிடித்த காவல்துறை.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்கு வைத்திருந்தவர்களை ட்ரோன் கேமிரா மூலம் கண்டுபிடித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ட்ரோன் கேமிரா உதவியுடன் DSP ரவிச்சந்திரன் தலைமையில், கள்ளச்சாராயம் விற்பனையாளர்களைத் தேடும் பணியில் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அப்போது, மலை மீது சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். விற்பனைக்கு வைத்திருந்த சாராயப் பாக்கெட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை:ட்ரோன் கேமிரா மூலம் கண்டுபிடித்த காவல்துறை.

Share via