வைகை, பல்லவன் ரயில்கள் தாம்பரம் - சென்னை எழும்பூர் இடையே பகுதியாக ரத்து - தெற்கு ரயில்வே.

by Editor / 08-10-2023 11:23:32am
வைகை, பல்லவன் ரயில்கள் தாம்பரம் - சென்னை எழும்பூர் இடையே பகுதியாக ரத்து - தெற்கு ரயில்வே.

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால் வருகிற (10.10.2023) செவ்வாய்க்கிழமை அன்று வைகை மற்றும் பல்லவன் ரயில்கள் தாம்பரம் - சென்னை எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.1. அதன்படி (வைகை எக்ஸ்பிரஸ்)ரயில் மதுரை - தாம்பரம் இடையே மற்றும் மறுமார்க்கம் தாம்பரம் - மதுரை இடையே இயக்கப்படும்.2. அதேபோல (பல்லவன் எக்ஸ்பிரஸ்) ரயில் காரைக்குடி - தாம்பரம் இடையே மற்றும் தாம்பரம் - காரைக்குடி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : வைகை, பல்லவன் ரயில்கள் தாம்பரம் - சென்னை எழும்பூர் இடையே பகுதியாக ரத்து - தெற்கு ரயில்வே

Share via