இருசக்கரவாகனத்தில் லிஃப்ட் கேட்டு சென்ற பெண் தலை நசுங்கி பலி.

by Editor / 14-11-2021 08:41:43pm
இருசக்கரவாகனத்தில் லிஃப்ட் கேட்டு சென்ற பெண் தலை நசுங்கி பலி.

சங்கராபுரம் அருகே இருசக்கரவாகனத்தில் லிப்ட் கேட்டு செண்ற பெண் தலை நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மணலூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்து என்பவரின் மனைவி ரத்தினாம்பாள்.

இவர் தனது உறவினர் வீட்டிக்கு  சென்று விட்டு தனது ஊர் மணலூருக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம்,(லிஃப்ட்) கேட்டு ஏறி சென்று கொண்டிருந்தார்.

பிரம்மகுண்டம் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி இருசக்கர வாகனத்தில் மோதியது. இதனால் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்த ரத்தினம்பாள் மீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதனால் ரத்தினாம்பாள் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த வடபொன்பரப்பி காவல் துறையினர், ரத்தினாம்பாள்  உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லிப்ட் கேட்டு சென்ற பெண் தவறி விழுந்து தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Tags :

Share via